பாதை விட்டுத் தடம் மாறிய பாவையே நில்!
பாலைவனத்தையும் மாற்றிய பார்வை உனது.
போதை தருமென்றாலும் மேதைமையும் தருமே அது;
பேதை யாரென்றாலும் பிழை செய்யத் தூண்டுமது.
கண்களை காட்டிக் காதல் செய்யச் சொன்னாயே,
மண்ணுக்கு மேலாக மிதக்கும் உன் இதயத்தையா?
வண்டுக்களையே ஊர்தியாக்கி இதழ்களை தொட நினைப்பாயே,
மீண்டும் வருமா என் மகரந்தப்பாவையென காத்திருக்கும் ஒரு மலரின் பாடலிது!
Eniya kavi, ethayam thodum eniya kavi.
நன்றி