வினை

19 10 2010

காற்றுள்ள போதே தூற்றிக் கொள்ளலாமென்றெண்ணி

மாற்றான் தோட்டத்திலிருந்து கொள்ளையடிக்கத் துணிந்தேன்..

எண்ணித் துனிக கருமம் என்பதால்

பல முறை எண்ணித்தான் துனிந்தேன் ‘சுடப் போகும்’ தண்ணியை விற்றிட..

களவும் கற்று மறக்கலாமென்ற ஒரே காரணத்தால்

மள மளவென்று தோண்டினேன் வறண்ட நிலத்தினை!

வினை விதைத்தது நானேயென்பதால் புது கிணத்துக்கு கிடைத்த நன்றியே நான் அறுத்த

வினையாக எண்ணி மாற்றானின் வீட்டிலிருந்து விடை பெற்றேன் முறைப்போடு!





மலரின் பாடல்

28 10 2009

பாதை விட்டுத் தடம் மாறிய பாவையே நில்!

பாலைவனத்தையும் மாற்றிய பார்வை உனது.

போதை தருமென்றாலும் மேதைமையும் தருமே அது;

பேதை யாரென்றாலும் பிழை செய்யத் தூண்டுமது.

 

கண்களை காட்டிக் காதல் செய்யச் சொன்னாயே,

மண்ணுக்கு மேலாக மிதக்கும் உன் இதயத்தையா?

வண்டுக்களையே ஊர்தியாக்கி இதழ்களை தொட நினைப்பாயே,

மீண்டும் வருமா என் மகரந்தப்பாவையென காத்திருக்கும் ஒரு மலரின் பாடலிது!





முதல் முயற்சி

28 10 2009

“ப்லாக்” ஆரம்பித்து நான்கு வருடங்கள் ஆன பிறகு தமிழில் எழுதும் முயற்சி இது. முயற்சி திருவினையாகும் என்பார்கள்.  என் முயற்சியோ இது வரை என் கைகளுக்கு கசப்பாகவும், கண்களுக்கு இனிமையகவும் இருந்து கொண்டிருக்கிறது…எனினும், திருவினையாகும் நாள் வெகு தொலைவில் இல்லை என்ற நம்பிக்கையே இந்த முயற்சியை நான் தளற விடாமல் இருக்க உந்துதலாக இருக்கும்.

பெரிதாக எதுவும் தமிழில் எழுதி சாதிக்காவிட்டாலும், சிறிதாக அவ்வப்பொழுதெழுதி, சிற்றின்பம் பெற்றுக்கொள்ளலாம் என சிந்தித்து, இத்தோடு முதல் முயற்சிக்கு முழுமனதோடு முற்றுப்புள்ளி வைக்கிறேன்.

(பிழை ஏதும் இருந்தால் சுட்டிக் காட்டுங்கள் – Typoக்களை சரி செய்ய பயன் படுத்திக் கொள்வேன் உங்கள் கருத்துக்கள் மூலம்…)








Follow

Get every new post delivered to your Inbox.