காற்றுள்ள போதே தூற்றிக் கொள்ளலாமென்றெண்ணி
மாற்றான் தோட்டத்திலிருந்து கொள்ளையடிக்கத் துணிந்தேன்..
எண்ணித் துனிக கருமம் என்பதால்
பல முறை எண்ணித்தான் துனிந்தேன் ‘சுடப் போகும்’ தண்ணியை விற்றிட..
களவும் கற்று மறக்கலாமென்ற ஒரே காரணத்தால்
மள மளவென்று தோண்டினேன் வறண்ட நிலத்தினை!
வினை விதைத்தது நானேயென்பதால் புது கிணத்துக்கு கிடைத்த நன்றியே நான் அறுத்த
வினையாக எண்ணி மாற்றானின் வீட்டிலிருந்து விடை பெற்றேன் முறைப்போடு!